Friday, October 14, 2016

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு

Published by | sifi | Friday, October 14, 2016  | 

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் தொர்போஜோன் கோஸ்டாசேதாருக்கும் இடையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

Filed in :
புதிய வெளிச்சம்

Write admin description here..

Discussion

Blog Archive

© Copyright © All rights reserved.

Designed By Sifi Web Solution

back to top