Saturday, October 29, 2016

இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்

Published by | sifi | Saturday, October 29, 2016  | 

எம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாண சபை அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
                                                                                                                        எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நடைபெறுகிறது எனக் கூறிக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சமாக செயற்பட்டு இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்த வேண்டாமென கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 65வது சபை அமர்வு பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரகுமார் தலைமையில் (27) நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை ஊடாக செயற்படுத்தப்படும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்திற்கு பொதுவான கொள்கை அடிப்படையில் கிராமங்களை தெரிவு செய்யும் பொறிமுறை ஒன்றை உருவாக்கக் கோரும்; தனிநபர் பிரேரனை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டும் இச்செயற்பாடானது கிழக்கு மாகாணத்தில் இனங்களுக்கிடையில் முரன்பாட்டினையும், புரிந்துணர்வின்மையையும் ஏற்படுத்தும் எனவே கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். கிழக்கு மாகாண சபை ஊடாக வறுமைக் கோட்டின் கீழ் மக்கள் வாழும் பின்தங்கிய கிராமங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்து இம்மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் 2016ம் வருடத்தில் 105 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மிகவும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் திட்டமிட்டு புறக்கணிகக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு ஒரு பக்கச்சார்பான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கிழக்கில் நல்லாட்சிக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் முறையற்ற வகையில் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாகவே கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. இது கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் எல்லாக் கட்சிகளும், எல்லா சமூகங்களும் இணைந்து மிகவும் வெளிப்பாட்டுத் தன்மையாகவும் மற்றும் அரசியல் பழிவாங்களின்றி எல்லா இடங்களையும், மதங்களையும் சமமாக மதித்து பங்கீடு செய்கின்ற ஒரு நிலைப்பாட்டில் கிழக்கு மாகாண சபை நிருவாகம் செயற்படுன்கிறது என்றும், நமது நாட்டில் அமைந்துள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் முன்னுதாரணமாக கிழக்கு மாகாண சபை மாத்திரம்; காணப்படுகிறது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கூறிய கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கிழக்கு மாகாணத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் பிரதேசங்களையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் அடையாளப்படுத்தி பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த மாகாண சபையின் ஆட்சிக் காலத்தில் கட்சி ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன இதனால் எந்தப்பிரச்சிணைகளுமின்றி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நல்லாட்சி என்ற பெயரில் நடைபெறும் கிழக்கு மாகாண சபை நிருவாகத்தினை ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களும், தமிழ் தேசிக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபையின் நல்லாட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தங்களது கருத்துக்களை பகிரங்கமாகவே கூறுமளவிற்கு நிலைமை மாறியுள்ளது. குறிப்பாக மாகாண சபை அமர்வுகளிலும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இவ்விடயமாக தர்க்கித்துக்கொள்வதனையும் அவதானிக்க முடிகிறது.

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதி நிதிகள் தெரிவு செய்யப்பட்டால் நிச்சயமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை பின்பற்றியே புதிய மக்கள் பிரதி நிதிகள் செயற்படுவார்கள். எனவே நாம் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை முன்மாதிரியாக செயற்படுத் வேண்டும்.

அம்பாரை மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பிரதேசங்களான இறக்காமப் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள இலுக்குச்சேனை, நியூகுன கிராமங்களில் பால் குளிரூட்டும் நிலையங்கள் அமைப்பதற்கும், இக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன்;; கால்நடைகள் வழங்குவதற்காக 400 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 37 பயனாளிகளுக்கு மாத்திரம் கால்நடைகள் வழங்கப்பட்ட நிலையில் இக்கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் நிதி வேறு பிரதேசங்களுக்கு அரசியல் நோக்கங்களுக்காக மாற்றப்பட்டது. 

இவ்விடயமாக கடந்த மாகாண சபை அமர்வுகளிலும் என்னால் பேசப்பட்ட போது 2016இல்; இக்கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சபையில் தெரிவித்து விட்டு தற்போது 2017ஆம் ஆண்டில் இக்கிராமங்களை இணைத்துக்கொள்வதாக தெரிவத்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Filed in :
புதிய வெளிச்சம்

Write admin description here..

Discussion

Blog Archive

© Copyright © All rights reserved.

Designed By Sifi Web Solution

back to top