யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் விசாரணைகளை ஆராய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் பொருட்டு ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் ஒருவரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே குறிப்பிட்டார்.
அந்த அதிகாரியினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் தேவையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.
சம்பவம் தொடர்பில் அந்த அதிகாரியினால் இன்று விசாரணை நடத்தப்பட்டு, பொலிஸ் ஆணைக்குழு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆரியதாச குரே தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு தொடர்பில் இரகசிய பொலிஸரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு அதிகாரி கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



