Friday, October 14, 2016

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகரைக் காணவில்லை: விசாரணைகள் ஆரம்பம்

Published by | sifi | Friday, October 14, 2016  | 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகரைக் காணவில்லை: விசாரணைகள் ஆரம்பம்


கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் காணாமற்போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – வரணியைச் சேர்ந்த 36 வயதான கிருஷ்ணசாமி ரதீசன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே காணாமற்போயுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் நண்பகல் முதல் காணாமற்போயுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டவர், கிளிநொச்சியில் உள்ள தனது வர்த்தக நிலையத்தைச் சென்றடையவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அவர் தலைமறைவாகியிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் கடத்தப்பட்டிருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அவரின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாக வர்த்தகரின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
காணாமற்போன தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வர்த்தக நிலையத்தில் நிறுத்திவிட்டு, தனியாக நடந்து சென்றுள்ளமை சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், அவருடைய தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பதிவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Filed in :
புதிய வெளிச்சம்

Write admin description here..

Discussion

Blog Archive

© Copyright © All rights reserved.

Designed By Sifi Web Solution

back to top