பொத்துவில் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் பொத்துவில் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் மஜீட் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று (13) இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல் தவம் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகேயின் இணைப்பாளர், திணைக்களத்தலைவர்கள், படை அதிகாரிகள், பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொத்துவில் களப்புக்கட்டு வீதி, சர்வோதய வீதியை கார்ப்பட் வீதியாக அமைத்தல், ஆத்திமுனை வீதியை கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு அதன் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல், பொத்துவில் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுத்தல், பொத்துவில் ஆதார வைத்திசாலையில் நிலவுகின்ற மனிதவள பற்றாக்குறை உட்பட சகல தேவைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றல், பொத்துவில் ஆதார வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்தல், ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினை ஆரம்பம் செய்யவும் அதற்கான நிதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளல் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




